வடக்கு சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் இலங்கைக்கு வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இன்று காலை 10.49 மணியளவில், வடக்கு சுமத்ராவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை  சுற்றியுள்ள கரையோரங்களில் வசிப்பவர்கள் இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அனைத்து சமீபத்திய தகவல்களும் வானிலையியல் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் போது ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply