உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையையும் தாண்டி உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதியளித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, முப்படையினர், பொலிஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அனைத்து மாணவர்களும் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச்  தடையின்றிச் சென்று அமர முடியும் என மேலும் தெரிவித்தார்.

மேலும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply