துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ்: 4.2 மில்லியன் நட்டஈடு!

அண்மையில் வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்தவின் குடும்பத்திற்கு ரூ. 4.2 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பங்களிப்பாக ரூ. 2.5 மில்லியன், இலங்கை பொலிஸ் திணைக்களம் ரூ.1.7 மில்லியன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இந்த நிதியை குடும்பத்தினரிடம் கையளித்தனர்.

குறித்த சம்பவம், 31 டிசம்பர் 2023 அன்று, வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவின் உபுல் சமிந்த கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply