காலியில் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்!

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகில் இருந்து சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ்  மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், நேற்றையதினம் இரவு பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி இழுவைப்படகு தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது கப்பலில் இருந்த 6 பேரும் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போதைப்பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் இழுவை படகும் இன்று காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply