யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,184 சந்தேக நபர்கள் கைது!

இன்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து மேலும் 1,184 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 49 பேரை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கவும், 59 சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்குமாறும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, 337 கிராம் ஹெரோயின், 242 கிராம் ஐஸ், 1,221 போதை மாத்திரைகள், 1.2 கிலோ குஷ், 6.62 கிலோ கஞ்சா மற்றும் 7,772 கஞ்சா செடிகள் என்பன சிறப்பு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்தியா நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக (0718598800) எனும் அவசர தொலைபேசி இலக்கத்தை
அமைத்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களை இல்லாதொழிக்கும் முயற்சியில், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் 2023 டிசம்பரின் இறுதியில் யுக்திய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply