வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்யும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply