உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை ரத்து!

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2023 ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக வெளியான தகவல்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 10 ஆம் திகதி மாணவர்கள் எழுதிய வினாத்தாள், தேர்வுத் திகதிக்கு முன்பே கசிந்ததால், வினாத்தாள் செல்லாததாகக் கருதப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட வினாத்தாளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply