இளம் பிக்குவை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

10 வயதான இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக மீஹகதென்ன பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 20 மற்றும் 17 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீஹகதென்ன கும்ஒதுவ மற்றும் களுபஹன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் இருவரை விகாரைக்கு அழைத்து வந்த விகாராதிபதியும் குறித்த இளம் தேரரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தேகத்துக்குரிய விகாராதிபதி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியதும் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply