சுதந்திர தினத்திற்காக ரயில் கால அட்டவணையில் சிறப்பு மாற்றங்கள்!

கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் நாளையதினம்  பல முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 5.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோரப் பாதையில் செல்லும் ரயில்கள் பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி மற்றும் செயலக ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள், அணிவகுப்பில் பங்கேற்கும் ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

76வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை கொழும்பு காலி முகத்திடலில் கௌரவமான முறையில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினும் இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார், மேலும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்து கொள்ள உள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply