இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

மாத்தளை – மஹாவெல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நபர் ஒருவரிடம் 10,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே இவ்வாறு குறித்த தொகையை இலஞ்சமாகப் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருக்கும்போது வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு அபராதப்பத்திரத்தை குறைந்த தொகையில் வழங்குவதாக கூறி இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் 10,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக, குறித்த நபர் இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply