கொழும்பில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ள முக்கிய வீதிகள்!

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பன்ன வித்தியாவில் நிலத்தடி குழாய்களை பதிக்கும் மூன்று கட்ட பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

ஸ்ரீ உத்தரானந்த மாவத்தையில் உள்ள நவம் மாவத்தையில் இருந்து கொம்பன்ன விடிய புகையிரத நிலையம் வரையான பகுதி இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, பெரஹெர மாவத்தையில் இருந்து நவம் மாவத்தை வரையான ஸ்ரீ உத்தரானந்த மாவத்தையுடன் கூடிய வீதி எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 4 ஆம் திகதி வரை மூடப்படும்.

மேலும் ரொட்டுண்டா கார்டன்ஸ் சந்தி மற்றும் பெரஹெர மாவத்தையை அண்மித்த வீதிகளும் எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply