கம்பஹாவில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூவர் கைது!

கம்பஹா பிரதேசத்தில் கடந்த மாதம் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான வேந்தர் கலப்பலுவாவே தம்மரதன தேரர் கடந்த ஜனவரி 23 அன்று, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரைக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு காரில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்கள் T-56 ரக துப்பாக்கியால் பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பௌத்த பிக்கு பலத்த காயங்களுக்கு உள்ளாகி கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply