ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெர்னாண்டோ, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதிக்குள் புதிதாக ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு கண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கும் இலங்கையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் மீள் நியமனம் அவசியமானது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply