யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 785 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ், இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 785 சந்தேகநபர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 596 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 189 பேரும் உள்ளடங்குவர்.

போதைப்பொருள் சந்தேக நபர்களில் 7 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 4 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 128 கிராம் ஹெரோயின், 115 கிராம் ஐஸ், 8.6 கிலோ கஞ்சா மற்றும் 138,676 கஞ்சா செடிகள் உள்ளடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, யுக்திய நடவடிக்கையின் முதல் 50 நாட்களில் 56,541 சந்தேகநபர்கள் பொலிஸாராலும் பாதுகாப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறப்பு நடவடிக்கையில் சுமார் 7,733 மில்லியன் ரூபாவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply