நாட்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு ஹக்கபட்டஸ் என்று அழைக்கப்படும் வாய் வெடிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply