குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிஸார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை! தென்னகோன் தெரிவிப்பு!

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டத்தை அமுல்படுத்த தயங்கமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நடுன் சிந்தகவுக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply