நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி!

தீர்மானிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த ஆண்டில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி பற்றாக்குறைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிளுக்கு பாராளுமன்ற விசேட குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பிலான விடயங்களும் கேட்கப்பட்டன.

இதன்போது, கேள்விக்கு பதிலளித்த மின்சார சபையின் பொது முகாமையாளர், கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply