பல்கலைக்கழக பேராசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் மருத்துவபீட பேராசிரியர்களுக்கான வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களால் கொழும்பு – மொரிஸ் வீதியில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபைக்கு முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்திற்கான இறுதியாண்டு கற்கைநெறிகள் அனைத்தும் நடைபெறுவதில்லை எனவும், அனுபவரீதியான கற்கைநெறிக்கு வைத்தியசாலைகளுக்கு தாம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, தனியார் பல்கலைக்கழகங்களில், மருத்துவபீடத்திற்கான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீட பேராசிரியர் நியமிக்கப்படாமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் மாணவர்களால் கேள்வியெழுப்பியுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply