கடலில் மூழ்கியவர்கள் உயிருடன் மீட்பு!

பாணந்துறையில் கடலில் மூழ்கிய  நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட  இளைஞர் ஒருவரையும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று   பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞர் ஒருவரும்  அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply