மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார்.

நேற்று  இரவு 11.30 மணியளவில் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்  தனது வீட்டிலிருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது  செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பம் ஒன்றில்  மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான பிரதான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

25 வயதான கிஹான் மதுசங்க லக்மால் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply