போராட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய வெஹரயாய பிரதேசத்தில் நிலவும் யானை மனித மோதலுக்கு தீர்வு காணுமாறு கோரி அப்பகுதி மக்கள் வீதியில் வாகனங்களை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply