கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் வெட்டுக்கு உள்ளாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply