ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி தாய் உட்பட இரண்டு பிள்ளைகளும் பலி!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், 36 வயதுடைய தாய், அவரது 6 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் முந்தலம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply