அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதிலுள்ள சிக்கல்!

அரச நிறுவனங்களின் சில பொறுப்பான அதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் வினைத்திறனற்றவர்களாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி கூறியுள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வித பொறுப்புக்கூறலுமின்றி செயற்படுவதாகவும் அரச உத்தியோகத்தர்கள் தமது தனிப்பட்ட விருப்புக்கேற்ப செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே அரச நிறுவனங்களில் இந்த நிலைமைகளை தடுக்கும் வகையில் மக்களுடன் நெருக்கமாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நேற்று (19) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வில் மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குப்பற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த சிறப்பு செயலமர்வில், மக்களுக்கு திறமையான மற்றும் நட்பு ரீதியான சேவையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply