துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதான நபர் ஒருவர் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சரியான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply