ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி குறித்த இரண்டு பெண்களும் நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கைது திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் 15 நிமிடத்தில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply