லெல்லமாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது !

2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நீர்கொழும்பு லெல்லமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு உதவியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

32 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் கட்டான, படுவத்தை மற்றும் அம்பலாய பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி, நீர்கொழும்பு, லெல்லாம என்ற இடத்தில் 25 வயதுடைய இளைஞன் மீது இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் பிட்டிபன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன் இளைஞன் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply