ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றவுடன் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

மரியாதை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக, புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு வழமையான நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply