மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் சிலர் மீட்பு!

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் வலயத்தில் பயங்கரவாதிகளால்  பிணைக் கைதிகளாக  தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களைக் கொண்ட குழு ஒன்று  மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேர் இன்று காலை மியன்மார் பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் மீட்கப்பட்டதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த குழுவினர் தற்போது மியாவடி பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எஞ்சி இருக்கும் கைதிகளையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும்  மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர்  ஜனக பண்டார மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply