நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணை தொடர்பான தீர்மானத்தை வழங்குவதற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதேஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
அரசுக்குச் சொந்தமான மின்சாரம் வழங்கும் நிறுவனம் தனது கட்டண திருத்த முன்மொழிவை பெப்ரவரி 22, 2024 அன்று ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
