காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இலங்கை ரயில்வே ஊழியர்கள் பலர் தீர்மானித்துள்ளனர்.

புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள், ரயில்வே காவலர்கள், ரயில்வே மேற்பார்வை மேலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

தங்களின் சம்பளத்தை குறைக்கும் அமைச்சரவை பத்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று  கோரி அரசாங்கத்தை வலியுறுத்தும் முகமாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply