சீதுவ பெண் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பாராசிட்டமோல் மருந்தை அதிகளவு உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொட, மடங்வல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14ஆம் திகதி சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கண்ணாடி போத்தலினால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கும் கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவத்தை கூறியதுடன் அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply