பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் உறைந்த கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுமார் 04 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அதன் தலைவர் ஆசிரி வாலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply