கொழும்பு கரையோரப்பாதையில் ரயில்கள் இரத்து!

கரையோர புகையிரதப்பாதையில் பயணிக்கும் ரயில்கள் இன்றும் (30) நாளையும் (31) தொடர்ந்தும் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளவத்தை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் ஒற்றைப் பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த  நிலைமை காரணமாக, கரையோரப் பாதையில் குறைந்தது 25 ரயில் பயணங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது, பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் நாளை இரவுக்குப் பிறகு மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply