பாதாள உலக கும்பலை பிடிக்கும் விசேட திட்டத்தில் மேலும் 9பேர் கைது!

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, காலி, ராகம, மொரட்டுவ, பண்டாரகம மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் புகுடு கண்ணா, பொடி லஸ்ஸி, கணேமுல்ல சஞ்சீவ, ஹீனட்டியன சங்கா, குடு அஞ்சு, குடு சலிந்து மற்றும் மத்துகம கவாரியா போன்ற பிரபல குற்றவாளிகள் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply