இவ்வருடத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 21,000 ஐக் கடந்தது!

இவ்வருடம் பதிவாகிய டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 21,000 ஐக் கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் ஏப்ரல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 21,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இகில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் (4,527)  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் 7,547 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 989 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஏற்படக்கூடிய டெங்கு நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சுற்றாடலைச் சுத்தமாகப் பேணுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply