அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஆறு நாட்களில் 235 மில்லியன் ரூபாய் வருமானம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஏப்ரல் 10 முதல் 15 வரை கடந்த ஆறு நாட்களில் 235 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை  தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில், குறிப்பாக பாரம்பரிய புத்தாண்டில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது விரைவுச்சாலைகளில் இருந்து கணிசமான அளவு வருவாயை சேகரித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply