சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன என்று புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
இதன்படி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் 2 அடி உயரத்திலும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீரும் வெளியேறுகின்றது என்று புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி மேலும் கூறினார்.
