ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
