இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
“தேர்தலுக்கான திட்டங்கள் மற்றும் வெளிப்படையான செயல்முறையை நிலைநிறுத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான சந்திப்பு பாராட்டுக்குரியது. இலங்கை, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதால், ஜனநாயக ஆட்சியின் தூணாகச் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்” – என்று அமெரிக்கத் தூதுவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
