யாழில் சாதனையை நிலைநாட்டிய பாடசாலைகள்- சற்று முன் வெளியான தகவல்!

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 2 விசேட சித்திகளை 30 மாணவர்களும் இரு விசேட சித்திகள், மற்றும் அதி திறமை சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 2 விசேட சித்திகளை மற்றும் அதிதிறமை சித்திகளை 29 மாணவிகளும், 2 விசேட சித்திகளை ,திறமை சித்திகளை 08 மாணவிகளும், 2 விசேட சித்திகளை ,சாதாரண சித்தியை ஒரு மாணவியும், ஒரு விசேட சித்தி , 2 அதி திறமை சித்திகளை 12 மாணவிகளும், ஏ,பி,சி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 19 மாணவர்கள் 3 விசேட சித்திகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply