பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளத்தை வழங்கவேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த்த் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
