இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி இன்று(13.06.2024) சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம்(Ramanathapuram) – மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்றொழிலாளர் கிராமத்தில் 60 சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து , கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இஞ்சி மூட்டைகள் பதுக்கி வைக்கப்படிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply