கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (13) காலை பொலிஸார் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதோடு உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தலைமுடி சுமார் 04 அங்குலத்திற்கு வளர்ந்துள்ளதாகவும், பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply