சிறுமிகளை தகாதமுறைக்குட்படுத்திய பிக்கு கைது!

மொனராகலை  வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் 12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளே தாகதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய​ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவ்விரு சிறுமிகளையும் மற்றும் சிறுமிகளின் தாய்மார்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து , உடல் ரீதியான தகாதமுறைக்கு உட்படுத்தப்படல் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply