திருமணம் நடந்து 4 நாட்களில் பெண் கடத்தல் !

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகதாகவும் குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளத்தையடுத்து கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு மணமகள் கடத்தப்பட்ட போது மணமகன் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மணப்பெண் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply