யாழில் 5 வாள்களுடன் கைது செய்யப்பட நபர்!

யாழில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் யாழ்ப்பாணம் பொலிசார் இன்று (22) அதிகாலை கைப்ற்றினர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தினை வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப் பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படி, சந்தேக நபரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply