நாட்டின் பல இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (23) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அதன் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை, அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply