தேங்காய் சிரட்டைக்கரிக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி!

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி தேங்காய் சிரட்டைகளில் இருந்து கரி உற்பத்தி செய்யப்பட்டு கார்பனாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தேங்காய் சிரட்டைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் ஒரு கிலோ 36 ரூபாய் என்ற விலையில் கார்பன் உற்பத்திக்காக தேங்காய்ச் சிரட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சந்தையில் தேங்காய் சிரட்டைகளுக்கு அதிக கிராக்கி நிலவுவதால், தேங்காய் சிரட்டைகளை அழிக்காமல், அவற்றை வருமானமாக பயன்படுத்த முடியும் எனவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply