மாத்தறையில் இனந்தெரியாத சடலம் மீட்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவித்ததுடன் இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply